Saturday, August 2, 2008

தாய்மொழி
மொழி என்பது விலங்கு குமுகத்தினிடமிருந்து மாந்த குமுகாயத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதும், மாந்த குமுகாயத்திற்கென்று-தனித்த சிறப்புமிக்க இடத்தினைப் பெற்றுத்தந்ததும், மாந்த குமுகாயத்திற்கே
அடிக்கல்லாக நின்று இயங்குவதுமான இயக்கவியலாகும்.
மாந்த இனத்திற்கென்று உள்ள குமுகாய வாழ்க்கையைத் தோற்றுவித்ததே மொழிதான். அத்தோடு குமுகாய நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணிகளான பண்பாடு, நாகரிகம், அறநெறி மற்றும் கற்கப்படவேண்டிய
கருத்துகள், கோட்பாடுகள் அனைத்தும் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு மொழி மூலமே கிடைக்கின்றன. மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பொருளாக நின்று
செயல்பட்டிருக்காவிடின் ஒருமரபினர் கற்ற அறிவுகள் அனைத்தும் அடுத்து வரும் மரபினர் பெற்று தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வழியேதும் இல்லாமல் போயிருக்கும். எனவேதான் மொழியென
ஒன்று இல்லாவிட்டால் மாந்த குமுகம் எனும் ஓர் அமைப்பே இருந்திருக்காது என்றும், ஆதிகால மக்களைப் போன்று தனித்தே வாழவேண்டியிருந்திருக்கும் என்றும் குமுகாய உளத்தியலர் ஆய்ந்துள்ளனர்.
மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவிதான் என சிலர் எளிதாக, அறியாது கூறுவர். ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாற்றிக் கொள்வதற்கு மட்டுமே அல்லாது மாந்தரின் உணர்வுகள்,
எண்ணங்கள்,பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் அனைத்துக் கோட்பாடுகளையும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கைமாற்றித்தரும் உயர்ந்த கருவியாகச் செயல்படுவதும், மாந்தகுலம் முன்னேற்றத்தை
நோக்கிச் செல்வதற்குரிய காரணியாக விளங்குவதும் ஆகும். ஆகவே வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிக் கிடப்பது மொழிதான் என்பது தெள்ளிதின் விளங்கும்.
மனவெழுச்சி வழிச் சைகைகளாகவும், செய்கைவழிச் சைகைகளாகவும், குறியீட்டுவழிச் சைகைகளாகவும்தோன்றிய மொழி- இடப்பெயர்வுகளாலும், குழுப்பிரிவுகளாலும் பிரிந்து போன மக்கள் கூட்டம்,
காலவெள்ளத்தால் கரைந்துபோன நிலையில் - தத்தமக்கே உரிய இனக் குழுக்களின் அடையாளங்களாக உலகில் பல்வேறு மொழிகள் கிளைத்துப் பெருகின. அம் மொழிகளே அவ்வினத்துக்குரிய தாய்மொழியாக நின்று
நிலைத்தன.
பிறந்தது முதல் குறிப்பிட்ட சில ஆண்டுகள்வரை- ஒரு குழந்தைக்கு, பெற்ற தாயோ அல்லது வளர்த்த தாயோ அல்லது அணுக்க உறவோதான் மிக மிக நெருக்கமான உறவுடையவராக,
முதன்மையுடையவராக விளங்குகின்றார். இவரிடமிருந்தே அக் குழந்தை மொழியைக் கற்கின்றது; அல்லது கற்பிக்கப்படுகின்றது. ஆகவே அம்மொழி தாய்மொழி எனப்பெற்றது. பிறந்தவுடனே தாயும் தந்தையும் இல்லாது
இல்லாது போயினும், அக் குழந்தைக்கு, அதனின் தாய்மொழியை - அது வளர்ந்து வரும் சூழலாகிய குமுகாயமே தாயாகி நின்று வழங்குகின்றது.
ஒருவனின் வாழ்வியலையே தாங்கி நிற்கின்ற இத்தகு தாய்மொழியின் உருவாக்கக் காலம் பிறந்தது முதல் ஐந்தாண்டுகள். இது மிக மிக அடிப்படையானது. இக் காலக்கட்டத்தில்தான் ஐம்பொறிகளால் உள்
வாங்கப்படும் தூண்டல்கள் அனைத்தும் தாய்மொழி என்னும் ஒலிப்பதிவுகளால் (கணிப்பொறியின் எந்திரமொழி {Machine language}போன்று) உருவாக்கப்பெற்று மூளையில் பதிக்கப்பெறுகின்றது. இப் பதிவீடுகள்
அனைத்தும், குறிப்பாக ஐந்து அகவைக்குள் குழந்தைகளுக்கு முறையாக, செப்பமுற பதிபிக்கப்பெற வேண்டும். இவ்வரிய காலக்கட்டத்தைத்தான் நாம் பெறுமளவு தவறவிடுகின்றோம். தவறவிடுவது
மட்டுமல்லாது, வளர்ந்துவரும் குமுகத்தின் அறிவு ஆக்கங்கள் அனைத்தும் சிதைந்து போகுமாறு- கல்வியின் பெயரால்அயல்மொழிகளை திணிக்கச் செய்து அழிவு வேலைகளைச் செய்து வருகின்றோம்.
குமுகாய உளத்தியல் சார்ந்த சில உண்மைகள் - தாய்மொழி பற்றி மேலும் பல தெளிவுகளைத் தருகின்றன. வங்காள ஓநாய்ச் சிறுமிகள் பற்றிய ஆய்வு ஒன்று கூறுவதாவது.........'பிறந்து ஓரிரு மாதங்களே
ஆன இரு பெண் குழந்தைகள் ஓநாய் ஒன்றினால் தூக்கிச் செல்லப்பட்டு சில ஆண்டுகள் தன் குட்டிகளோடு வளர்த்து வந்ததைக் கண்ணுற்ற கிருத்துவ துறவி ஒருவர் அக்குழந்தைகளை மீட்டெடுத்தார்.
அந்நிலையில் அக்குழந்தைகள்- ஓநாயின் நடத்தைகளோடு, ஊலையிட்டு குரலெழுப்புவதைத் தவிர எதுவும் பேசத்தெரியாத நிலையிலேயே இருந்தனர். அத்துறவி பலவாறு முயன்றும், 15 அகவை வரை வளர்க்கப்
பட்ட அக்குழந்தைகள் - அதிக அளவு பதினாறு சொற்களை மட்டுமே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.'
இதே போன்று மற்றொரு ஆய்வு....... 'ஆப்பிரிக்க பழங்குடி மக்களால் காட்டில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனை, இயல்பு நடத்தைக்கு கொண்டுவரமுயன்ற ஒரு பிரஞ்சு உளத்தியலர் மிகக்குறைந்த
அளவுக்குக்கூட பேசுவதற்கு, மொழியை அவரால் ஊட்டமுடியவில்லை.'
இவ்வாய்வுகளைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், குழந்தைப்பருவத்தினின்றே கற்கப்படுதாகிய மொழி செப்பமுற கற்பிக்கப்படவேண்டும் என்பதையும், பிற்கால சிந்தனைத் திறனை குலைக்கும்
வண்ணம் பல்வேறு அயல்மொழிகளை தாறுமாறான நிலையில் திணிப்பது எவ்வளவு கேடுவிளைவிக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான். இந்த வேலையைத்தான் இன்றையத் தமிழகம்செய்து
வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இன்று தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பெருகிவரும் அரைவேக்காட்டு ஆங்கிலப்பள்ளிகள் தாய்மொழியை ஒழித்துக்கட்டுவதும், புறக்கணிப்பதும் - தாய்மொழியால் நிலைநிறுத்தப்படவேண்டிய
சிறந்த ஆளுமைப் பண்பை சீரழிப்பதுமான அழும்புகளைச் செய்து வருகின்றன; எந்த மொழியும் சரிவரத் தெரியாத ஏதுங்கெட்ட குடிமக்களை உருவாக்கி வருகின்றன.
சோவியத்து நாட்டைச் சேர்ந்த வசீலி சுகம்லீசுகி என்னும் ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்..........'சொந்த மொழியில் தேர்ச்சி பெறாமலும், அதன் அழகை உணராமலும் ஒருவன் இருந்தால் அவனுக்கு மற்ற
மொழிகளின்- களஞ்சியங்களில் உருவகம் கொண்டிருக்கின்ற செல்வம் எட்டாமலே இருந்துவிடும். ஒருவன் தாய்மொழியின் மென்மையை எந்த அளவுக்கு அறிகிறானோ அந்த அளவுக்குமென்மையாகத்
தாய்மொழிச் சொற்களின் பொருள் வேறுபாடுகளை அவன் உள்வாங்கிக் கொள்வான்; சொற்களின் அழகை அவ்வளவு விரைவாக அவனின் நெஞ்சம் ஏற்றுக்கொள்ளும்......' தாய்மொழி பற்றிய இவரின் கூற்று
எத்தகைய பொருள் ஆழமுடையது என்பது விளங்கும்.
மொழி பற்றிய இன்னும் ஓர் ஆழமான அறிவியல் பார்வையைத் தருகின்றார் உலகப் புகழ்பெற்ற உளத்தியல் அறிஞர் இவான் பாவ்லோவ். '.....சுற்றிலுமுள்ள உலகால் தோற்றுவிக்கப்படும் புலன்
உணர்வுகளும் கருத்துகளும் நமக்கு - இயல்பில், உருவ சைகைகள் என்பது முதல்நிலை சைகையாகும்; பேச்சு என்பது இரண்டாம் சைகையாகும். அதாவது, 'சைகைகளின் சைகைகளாக' ஆகின்றது. இதுவே
மாந்தனுக்கு உரித்தான தனிப்பட்ட உயர்மனப்பான்மையாகின்றது.....' ...'மாந்தனுக்கே உரித்தான, உயர்மனப்பான்மை என்பது இரண்டாவது சைகை மண்டலமான பேச்சு,வரைதல்,எழுதுதல், எண்ணல் ஆகும்....'
'.....மாந்தன் மற்றும் விலங்கினங்களின் மூளையின் நடவடிக்கைகளுக்கிடையிலான அடிப்படை வேறுபாடு, பேச்சை பயன்படுத்துவதில்தான் இருக்கின்றது. பேச்சு என்பது ஒரு முழுமையான மாந்த நிகழ்வாகும்;
இன வேறுபாடுகள் ஏதாவது இருப்பின் அது பேச்சுக்கான மூளைச்செயல்முறையில் வெளிப்பாடடையும்....'
இவ்வாறு கூறுவதிலிருந்து ஓர் இனத்திற்கான மொழி அல்லது அதன் தாய்மொழி முதன்மையானது என்பது புலப்படும். அத்தோடு தாய்மொழி என்பது ஓர் இனத்தின் வெற்றிக்கு மிக மிக அடிப்படையானதாக
உள்ளது மட்டுமல்லாமல் அதுவே அவ்வினத்திற்கு உரிய மொழியாகவும், பயன்பாட்டில் எளிய மொழியாகவும் விளங்குகிறது.
சிந்தனை என்பது மொழியின் உள்பேச்சு விளைவாகும். வாட்சனின் நடத்தைக்கொள்கையினர் மொழிவும் சிந்தனையும் ஒன்று என்றே கருதுகின்றனர். இதேபோல் மார்க்சு முல்லர் என்பார் மொழியும்
சிந்தனையும் மாந்தரிடத்து ஒரே சமயத்தில் தோன்றுகிறதென்றும், ஒன்றில்லாது மற்றொன்று தோன்றவியலாது என்றும் கூறுகின்றார்.
ஆக, சிந்தனைத் திறனை வளர்ப்பதென்பது மொழிதான் என்றவகையில், அதற்குத் தக்கமொழி எதுவெனின் அவரவர் தாய்மொழியே என்பதில் எவ்வகை ஐயப்பாடும் இல்லை. தாய்மொழி வழியே
சிந்தனையையும் அறிவையும் வளர்த்துக்கொள்வதே சிறப்பானதும், இயல்பானதும் ஆகும்.
தாய்மொழி என்பது ஒரு தாளில் போடப்படும் முதல் நேர்க்கோடு போன்றது. அந்த நேர்க்கோட்டை ஒட்டி எத்தனை நேர்க்கோடு வேண்டுமானாலும் இணையாகப் போட்டுக்கொள்ளலாம். அதாவது
தேவைப்படின் வேறு எந்த அயல் மொழியையும் செப்பமுறக் கற்கலாம். முதற்கோடே முற்றுங்கோணலாக இருப்பின் அடுத்து வரும் கோடுகள் எவ்வாறு சரியாக அமையமுடியும்? ஆதலின் மாந்த மூளையில்
அவரவர் தாய்மொழித்திறனே முதலாவதாக உருவாக்கப்படவேண்டும்; அதுவும் செப்பமுற உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதான் கற்கப்பெறும் அயல்மொழிகளும்கூட மிகவும் தேர்ச்சியுடையனவாக
இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நன்னிலக்கடலையொட்டிய மேற்காசியப்பகுதியினின்று, எமுராபி மன்னனால்விரட்டப்பட்ட - சொந்த மண்ணை இழந்த எபிரேய மொழி பேசும் மக்களான
யூத மக்கள் பல நூற்றாண்டுக் காலமாக ஆங்கிலம், பிரஞ்சு,செர்மனி மொழிபேசும் நாடுகளில் ஏதிலிகள் போல் வாழ்ந்து வந்தனர். எங்கு வதிந்து வாழ்ந்துவந்தார்களோ அவ்விடத்து மொழியை
தாய்மொழியாகக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இங்கிலாந்துநாட்டின் உதவியால் இன்று - லெபனான், சிரியா, சோர்டான் நாடுகளுக்கு இடையிலான ஒரு
பகுதியை இசுரேல் நாடு என உருவாக்கி, வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கு அவர்களின் முன்னேற்றம் யாராலும் தடுக்கமுடியாதபடி மிக முனைப்பாக உள்ளது. ஆங்குள்ள குடிமகன்
ஒவ்வொருவனும் பல்வேறு துறைகளில், பல திறமைகளைப்பெற்றவனாக வாழ்கின்றான். மிக குறுகிய காலத்தில் அவர்கள் இவ்வகை விரைந்த முன்னேற்றத்தை அடைந்தனர் என்பதை எண்ணிப்பார்க்க
வேண்டும். வழக்கற்று அழியும் நிலையில் இருந்த அவர்களின் தாய்மொழியான எபிரேயத்தை மீட்டெடுத்து, செப்பம் செய்து அம்மொழியிலேயே உலகின் அனைத்து அறிவையும் கொணரச்செய்து -
அம்மொழிவழியே அந்த யூத மக்கள் கல்வி கற்று நாட்டையும் மக்களையும் முன்னேற்றமடையச் செய்துள்ளனர். இவ் வரலாறு, நமக்கு கற்றுத்தரும் தாய்மொழிபற்றிய பாடமாகும்.
இந் நிலைகளைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலாதும், கவனியாதும் நம் தமிழகத்தின் கல்வியுலகம் கரவாகச் சென்று கொண்டிருப்பதும், நாட்டைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ மொழியைப்பற்றியோ
கொஞ்சமும் அக்கரை இல்லாத அரசியற் கொள்ளையர்களின் போக்கும், இவர்களுக்கேற்ற கல்வி வணிகர் பலரும் , தற்பொழுதுள்ள தமிழகத்தின் இழிநிலையைப் பயன்படுத்திக்கொண்டு சுரண்டிக்கொழுப்பதும்
தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வருகின்றது.
போலி நாகரிகத்தாலும், அடிமை உணர்வாலும் கட்டுண்டு கிடக்கும் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பலரும் - தம் பிள்ளைகள் ஆங்கிலம் படித்துவிட்டாலே இன்ப உலகம் எதிரில் வந்துவிடும் எனும்
பேராசை கொண்டோராய் பித்தம் பிடித்து அலைகின்றனர். இவ்வகைப் போக்கு - அவர்களுக்குள்ளாகவே அறியாது செய்து கொள்ளும் குமுகாயத் தற்கொலை முயற்சியே அன்றி வேறில்லை.
இன்னும் 60 விழுக்காட்டுக்கும் மேலாக எழுத்தறிவற்ற மக்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இந் நிலையில், தம் பிள்ளைகளை ஓரளவு படிக்கவைத்து முன்னேற்றிவிடலாம் என
எண்ணியிருக்கும் நடுத்தட்டு மக்கள் தமக்குள்ள சொத்தில் ஒரு பகுதியோ அல்லது பெரும் பகுதியோ விற்றும், அல்லது தமது வருமானத்தில் பெரும்பகுதியை இழந்தும் - இக் கல்வி வணகர்களின் வலையில்
விழுந்து அல்லலுறும்நிலை ஒரு பக்கம் இருக்க, படிக்கும் மாணவர்களின் கல்வி ஊடகமொழி ஆங்கிலமாக இருப்பதனால் அவர்களின் கல்வி முன்னேற்றம் விழலாய் விளைந்துபோய் நிற்கின்றது.
இவர்களை விடவும் மிகவும் வறுமையில் வாடும் பெறுவாரியான உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு,- இப்பொழுது கொடிகட்டிப் பறக்கும் இலண்டன் மாதிரிப் பள்ளிகளின் கல்வி கனவிலும் காணவியலா
ஒன்று.
இவ் இவல நிலையை சற்று விழிப்போடு பார்போமானால், கல்வி என்பதே மேல்தட்டு மக்களுக்கும், வல்லாண்மைச் சாதியர்க்கும், அரசியல் திருடர்களுக்கும் மட்டுமே என்ற புதிய 'வர்ணாசிரம' கொள்கையாகத்
தெரிகின்றது. தந்தைப் பெரியாராலும், அண்ணல் அம்பேத்காராலும் - பெருவாரி மக்கள் தொகுதியான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழிசெய்த முன்னேற்ற முயற்சிகள் யாவும்,
இன்று ஆங்கில வழிக் கல்வியின் பெயரால் பெரிதும் தடைபட்டு நிற்கும் போக்கை, நாம் மீளவும் ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தாய்மொழியைத் தவிர்த்து விட்டு, அயல்மொழிவாயிலாக முன்னேறியதாக உலகில் எந்த நாடும் இல்லை; அதற்கான வாய்ப்புக் கூறுகளும் இல்லை. தாய்மொழிவழிக் கல்வி ஒன்றினால்தான் அனைவருக்குமான
கல்வியும், சமன்மைக்கான உரிமைகளையும் பெறமுடியும்.
உலகமொழிகளுக்கெல்லாம் தாயாகவும், வேராகவும் நின்றுவிளங்கும் தமிழ்மொழியையும், உலகின் தலைசிறந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் நம் தமிழினம், பல நூற்றாண்டு காலம் நோயுற்று இருந்து
வருகின்ற நிலைமாறவும் - தலைநிமிர்ந்து முன்னேற்றப்பாதை நோக்கி நடையிடவும் வேண்டுமெனில் - இனிமேலும் காலத்தாழ்த்தம் இல்லாமல் தாய்மொழிக்கல்வியை விரைந்து நடைமுறைப்படுத்துவதே நம்மின்
உடனடிக் கடமையாகும்.














தாய்மொழி
மொழி என்பது விலங்கு குமுகத்தினிடமிருந்து மாந்த குமுகாயத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதும், மாந்த குமுகாயத்திற்கென்று-தனித்த சிறப்புமிக்க இடத்தினைப் பெற்றுத்தந்ததும், மாந்த குமுகாயத்திற்கே
அடிக்கல்லாக நின்று இயங்குவதுமான இயக்கவியலாகும்.
மாந்த இனத்திற்கென்று உள்ள குமுகாய வாழ்க்கையைத் தோற்றுவித்ததே மொழிதான். அத்தோடு குமுகாய நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணிகளான பண்பாடு, நாகரிகம், அறநெறி மற்றும் கற்கப்படவேண்டிய
கருத்துகள், கோட்பாடுகள் அனைத்தும் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு மொழி மூலமே கிடைக்கின்றன. மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பொருளாக நின்று
செயல்பட்டிருக்காவிடின் ஒருமரபினர் கற்ற அறிவுகள் அனைத்தும் அடுத்து வரும் மரபினர் பெற்று தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வழியேதும் இல்லாமல் போயிருக்கும். எனவேதான் மொழியென
ஒன்று இல்லாவிட்டால் மாந்த குமுகம் எனும் ஓர் அமைப்பே இருந்திருக்காது என்றும், ஆதிகால மக்களைப் போன்று தனித்தே வாழவேண்டியிருந்திருக்கும் என்றும் குமுகாய உளத்தியலர் ஆய்ந்துள்ளனர்.
மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவிதான் என சிலர் எளிதாக, அறியாது கூறுவர். ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாற்றிக் கொள்வதற்கு மட்டுமே அல்லாது மாந்தரின் உணர்வுகள்,
எண்ணங்கள்,பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் அனைத்துக் கோட்பாடுகளையும் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கைமாற்றித்தரும் உயர்ந்த கருவியாகச் செயல்படுவதும், மாந்தகுலம் முன்னேற்றத்தை
நோக்கிச் செல்வதற்குரிய காரணியாக விளங்குவதும் ஆகும். ஆகவே வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிக் கிடப்பது மொழிதான் என்பது தெள்ளிதின் விளங்கும்.
மனவெழுச்சி வழிச் சைகைகளாகவும், செய்கைவழிச் சைகைகளாகவும், குறியீட்டுவழிச் சைகைகளாகவும்தோன்றிய மொழி- இடப்பெயர்வுகளாலும், குழுப்பிரிவுகளாலும் பிரிந்து போன மக்கள் கூட்டம்,
காலவெள்ளத்தால் கரைந்துபோன நிலையில் - தத்தமக்கே உரிய இனக் குழுக்களின் அடையாளங்களாக உலகில் பல்வேறு மொழிகள் கிளைத்துப் பெருகின. அம் மொழிகளே அவ்வினத்துக்குரிய தாய்மொழியாக நின்று
நிலைத்தன.
பிறந்தது முதல் குறிப்பிட்ட சில ஆண்டுகள்வரை- ஒரு குழந்தைக்கு, பெற்ற தாயோ அல்லது வளர்த்த தாயோ அல்லது அணுக்க உறவோதான் மிக மிக நெருக்கமான உறவுடையவராக,
முதன்மையுடையவராக விளங்குகின்றார். இவரிடமிருந்தே அக் குழந்தை மொழியைக் கற்கின்றது; அல்லது கற்பிக்கப்படுகின்றது. ஆகவே அம்மொழி தாய்மொழி எனப்பெற்றது. பிறந்தவுடனே தாயும் தந்தையும் இல்லாது
இல்லாது போயினும், அக் குழந்தைக்கு, அதனின் தாய்மொழியை - அது வளர்ந்து வரும் சூழலாகிய குமுகாயமே தாயாகி நின்று வழங்குகின்றது.
ஒருவனின் வாழ்வியலையே தாங்கி நிற்கின்ற இத்தகு தாய்மொழியின் உருவாக்கக் காலம் பிறந்தது முதல் ஐந்தாண்டுகள். இது மிக மிக அடிப்படையானது. இக் காலக்கட்டத்தில்தான் ஐம்பொறிகளால் உள்
வாங்கப்படும் தூண்டல்கள் அனைத்தும் தாய்மொழி என்னும் ஒலிப்பதிவுகளால் (கணிப்பொறியின் எந்திரமொழி {Machine language}போன்று) உருவாக்கப்பெற்று மூளையில் பதிக்கப்பெறுகின்றது. இப் பதிவீடுகள்
அனைத்தும், குறிப்பாக ஐந்து அகவைக்குள் குழந்தைகளுக்கு முறையாக, செப்பமுற பதிபிக்கப்பெற வேண்டும். இவ்வரிய காலக்கட்டத்தைத்தான் நாம் பெறுமளவு தவறவிடுகின்றோம். தவறவிடுவது
மட்டுமல்லாது, வளர்ந்துவரும் குமுகத்தின் அறிவு ஆக்கங்கள் அனைத்தும் சிதைந்து போகுமாறு- கல்வியின் பெயரால்அயல்மொழிகளை திணிக்கச் செய்து அழிவு வேலைகளைச் செய்து வருகின்றோம்.
குமுகாய உளத்தியல் சார்ந்த சில உண்மைகள் - தாய்மொழி பற்றி மேலும் பல தெளிவுகளைத் தருகின்றன. வங்காள ஓநாய்ச் சிறுமிகள் பற்றிய ஆய்வு ஒன்று கூறுவதாவது.........'பிறந்து ஓரிரு மாதங்களே
ஆன இரு பெண் குழந்தைகள் ஓநாய் ஒன்றினால் தூக்கிச் செல்லப்பட்டு சில ஆண்டுகள் தன் குட்டிகளோடு வளர்த்து வந்ததைக் கண்ணுற்ற கிருத்துவ துறவி ஒருவர் அக்குழந்தைகளை மீட்டெடுத்தார்.
அந்நிலையில் அக்குழந்தைகள்- ஓநாயின் நடத்தைகளோடு, ஊலையிட்டு குரலெழுப்புவதைத் தவிர எதுவும் பேசத்தெரியாத நிலையிலேயே இருந்தனர். அத்துறவி பலவாறு முயன்றும், 15 அகவை வரை வளர்க்கப்
பட்ட அக்குழந்தைகள் - அதிக அளவு பதினாறு சொற்களை மட்டுமே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.'
இதே போன்று மற்றொரு ஆய்வு....... 'ஆப்பிரிக்க பழங்குடி மக்களால் காட்டில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனை, இயல்பு நடத்தைக்கு கொண்டுவரமுயன்ற ஒரு பிரஞ்சு உளத்தியலர் மிகக்குறைந்த
அளவுக்குக்கூட பேசுவதற்கு, மொழியை அவரால் ஊட்டமுடியவில்லை.'
இவ்வாய்வுகளைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், குழந்தைப்பருவத்தினின்றே கற்கப்படுதாகிய மொழி செப்பமுற கற்பிக்கப்படவேண்டும் என்பதையும், பிற்கால சிந்தனைத் திறனை குலைக்கும்
வண்ணம் பல்வேறு அயல்மொழிகளை தாறுமாறான நிலையில் திணிப்பது எவ்வளவு கேடுவிளைவிக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான். இந்த வேலையைத்தான் இன்றையத் தமிழகம்செய்து
வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இன்று தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பெருகிவரும் அரைவேக்காட்டு ஆங்கிலப்பள்ளிகள் தாய்மொழியை ஒழித்துக்கட்டுவதும், புறக்கணிப்பதும் - தாய்மொழியால் நிலைநிறுத்தப்படவேண்டிய
சிறந்த ஆளுமைப் பண்பை சீரழிப்பதுமான அழும்புகளைச் செய்து வருகின்றன; எந்த மொழியும் சரிவரத் தெரியாத ஏதுங்கெட்ட குடிமக்களை உருவாக்கி வருகின்றன.
சோவியத்து நாட்டைச் சேர்ந்த வசீலி சுகம்லீசுகி என்னும் ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்..........'சொந்த மொழியில் தேர்ச்சி பெறாமலும், அதன் அழகை உணராமலும் ஒருவன் இருந்தால் அவனுக்கு மற்ற
மொழிகளின்- களஞ்சியங்களில் உருவகம் கொண்டிருக்கின்ற செல்வம் எட்டாமலே இருந்துவிடும். ஒருவன் தாய்மொழியின் மென்மையை எந்த அளவுக்கு அறிகிறானோ அந்த அளவுக்குமென்மையாகத்
தாய்மொழிச் சொற்களின் பொருள் வேறுபாடுகளை அவன் உள்வாங்கிக் கொள்வான்; சொற்களின் அழகை அவ்வளவு விரைவாக அவனின் நெஞ்சம் ஏற்றுக்கொள்ளும்......' தாய்மொழி பற்றிய இவரின் கூற்று
எத்தகைய பொருள் ஆழமுடையது என்பது விளங்கும்.
மொழி பற்றிய இன்னும் ஓர் ஆழமான அறிவியல் பார்வையைத் தருகின்றார் உலகப் புகழ்பெற்ற உளத்தியல் அறிஞர் இவான் பாவ்லோவ். '.....சுற்றிலுமுள்ள உலகால் தோற்றுவிக்கப்படும் புலன்
உணர்வுகளும் கருத்துகளும் நமக்கு - இயல்பில், உருவ சைகைகள் என்பது முதல்நிலை சைகையாகும்; பேச்சு என்பது இரண்டாம் சைகையாகும். அதாவது, 'சைகைகளின் சைகைகளாக' ஆகின்றது. இதுவே
மாந்தனுக்கு உரித்தான தனிப்பட்ட உயர்மனப்பான்மையாகின்றது.....' ...'மாந்தனுக்கே உரித்தான, உயர்மனப்பான்மை என்பது இரண்டாவது சைகை மண்டலமான பேச்சு,வரைதல்,எழுதுதல், எண்ணல் ஆகும்....'
'.....மாந்தன் மற்றும் விலங்கினங்களின் மூளையின் நடவடிக்கைகளுக்கிடையிலான அடிப்படை வேறுபாடு, பேச்சை பயன்படுத்துவதில்தான் இருக்கின்றது. பேச்சு என்பது ஒரு முழுமையான மாந்த நிகழ்வாகும்;
இன வேறுபாடுகள் ஏதாவது இருப்பின் அது பேச்சுக்கான மூளைச்செயல்முறையில் வெளிப்பாடடையும்....'
இவ்வாறு கூறுவதிலிருந்து ஓர் இனத்திற்கான மொழி அல்லது அதன் தாய்மொழி முதன்மையானது என்பது புலப்படும். அத்தோடு தாய்மொழி என்பது ஓர் இனத்தின் வெற்றிக்கு மிக மிக அடிப்படையானதாக
உள்ளது மட்டுமல்லாமல் அதுவே அவ்வினத்திற்கு உரிய மொழியாகவும், பயன்பாட்டில் எளிய மொழியாகவும் விளங்குகிறது.
சிந்தனை என்பது மொழியின் உள்பேச்சு விளைவாகும். வாட்சனின் நடத்தைக்கொள்கையினர் மொழிவும் சிந்தனையும் ஒன்று என்றே கருதுகின்றனர். இதேபோல் மார்க்சு முல்லர் என்பார் மொழியும்
சிந்தனையும் மாந்தரிடத்து ஒரே சமயத்தில் தோன்றுகிறதென்றும், ஒன்றில்லாது மற்றொன்று தோன்றவியலாது என்றும் கூறுகின்றார்.
ஆக, சிந்தனைத் திறனை வளர்ப்பதென்பது மொழிதான் என்றவகையில், அதற்குத் தக்கமொழி எதுவெனின் அவரவர் தாய்மொழியே என்பதில் எவ்வகை ஐயப்பாடும் இல்லை. தாய்மொழி வழியே
சிந்தனையையும் அறிவையும் வளர்த்துக்கொள்வதே சிறப்பானதும், இயல்பானதும் ஆகும்.
தாய்மொழி என்பது ஒரு தாளில் போடப்படும் முதல் நேர்க்கோடு போன்றது. அந்த நேர்க்கோட்டை ஒட்டி எத்தனை நேர்க்கோடு வேண்டுமானாலும் இணையாகப் போட்டுக்கொள்ளலாம். அதாவது
தேவைப்படின் வேறு எந்த அயல் மொழியையும் செப்பமுறக் கற்கலாம். முதற்கோடே முற்றுங்கோணலாக இருப்பின் அடுத்து வரும் கோடுகள் எவ்வாறு சரியாக அமையமுடியும்? ஆதலின் மாந்த மூளையில்
அவரவர் தாய்மொழித்திறனே முதலாவதாக உருவாக்கப்படவேண்டும்; அதுவும் செப்பமுற உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதான் கற்கப்பெறும் அயல்மொழிகளும்கூட மிகவும் தேர்ச்சியுடையனவாக
இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நன்னிலக்கடலையொட்டிய மேற்காசியப்பகுதியினின்று, எமுராபி மன்னனால்விரட்டப்பட்ட - சொந்த மண்ணை இழந்த எபிரேய மொழி பேசும் மக்களான
யூத மக்கள் பல நூற்றாண்டுக் காலமாக ஆங்கிலம், பிரஞ்சு,செர்மனி மொழிபேசும் நாடுகளில் ஏதிலிகள் போல் வாழ்ந்து வந்தனர். எங்கு வதிந்து வாழ்ந்துவந்தார்களோ அவ்விடத்து மொழியை
தாய்மொழியாகக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இங்கிலாந்துநாட்டின் உதவியால் இன்று - லெபனான், சிரியா, சோர்டான் நாடுகளுக்கு இடையிலான ஒரு
பகுதியை இசுரேல் நாடு என உருவாக்கி, வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கு அவர்களின் முன்னேற்றம் யாராலும் தடுக்கமுடியாதபடி மிக முனைப்பாக உள்ளது. ஆங்குள்ள குடிமகன்
ஒவ்வொருவனும் பல்வேறு துறைகளில், பல திறமைகளைப்பெற்றவனாக வாழ்கின்றான். மிக குறுகிய காலத்தில் அவர்கள் இவ்வகை விரைந்த முன்னேற்றத்தை அடைந்தனர் என்பதை எண்ணிப்பார்க்க
வேண்டும். வழக்கற்று அழியும் நிலையில் இருந்த அவர்களின் தாய்மொழியான எபிரேயத்தை மீட்டெடுத்து, செப்பம் செய்து அம்மொழியிலேயே உலகின் அனைத்து அறிவையும் கொணரச்செய்து -
அம்மொழிவழியே அந்த யூத மக்கள் கல்வி கற்று நாட்டையும் மக்களையும் முன்னேற்றமடையச் செய்துள்ளனர். இவ் வரலாறு, நமக்கு கற்றுத்தரும் தாய்மொழிபற்றிய பாடமாகும்.
இந் நிலைகளைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலாதும், கவனியாதும் நம் தமிழகத்தின் கல்வியுலகம் கரவாகச் சென்று கொண்டிருப்பதும், நாட்டைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ மொழியைப்பற்றியோ
கொஞ்சமும் அக்கரை இல்லாத அரசியற் கொள்ளையர்களின் போக்கும், இவர்களுக்கேற்ற கல்வி வணிகர் பலரும் , தற்பொழுதுள்ள தமிழகத்தின் இழிநிலையைப் பயன்படுத்திக்கொண்டு சுரண்டிக்கொழுப்பதும்
தமிழகத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வருகின்றது.
போலி நாகரிகத்தாலும், அடிமை உணர்வாலும் கட்டுண்டு கிடக்கும் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பலரும் - தம் பிள்ளைகள் ஆங்கிலம் படித்துவிட்டாலே இன்ப உலகம் எதிரில் வந்துவிடும் எனும்
பேராசை கொண்டோராய் பித்தம் பிடித்து அலைகின்றனர். இவ்வகைப் போக்கு - அவர்களுக்குள்ளாகவே அறியாது செய்து கொள்ளும் குமுகாயத் தற்கொலை முயற்சியே அன்றி வேறில்லை.
இன்னும் 60 விழுக்காட்டுக்கும் மேலாக எழுத்தறிவற்ற மக்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இந் நிலையில், தம் பிள்ளைகளை ஓரளவு படிக்கவைத்து முன்னேற்றிவிடலாம் என
எண்ணியிருக்கும் நடுத்தட்டு மக்கள் தமக்குள்ள சொத்தில் ஒரு பகுதியோ அல்லது பெரும் பகுதியோ விற்றும், அல்லது தமது வருமானத்தில் பெரும்பகுதியை இழந்தும் - இக் கல்வி வணகர்களின் வலையில்
விழுந்து அல்லலுறும்நிலை ஒரு பக்கம் இருக்க, படிக்கும் மாணவர்களின் கல்வி ஊடகமொழி ஆங்கிலமாக இருப்பதனால் அவர்களின் கல்வி முன்னேற்றம் விழலாய் விளைந்துபோய் நிற்கின்றது.
இவர்களை விடவும் மிகவும் வறுமையில் வாடும் பெறுவாரியான உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு,- இப்பொழுது கொடிகட்டிப் பறக்கும் இலண்டன் மாதிரிப் பள்ளிகளின் கல்வி கனவிலும் காணவியலா
ஒன்று.
இவ் இவல நிலையை சற்று விழிப்போடு பார்போமானால், கல்வி என்பதே மேல்தட்டு மக்களுக்கும், வல்லாண்மைச் சாதியர்க்கும், அரசியல் திருடர்களுக்கும் மட்டுமே என்ற புதிய 'வர்ணாசிரம' கொள்கையாகத்
தெரிகின்றது. தந்தைப் பெரியாராலும், அண்ணல் அம்பேத்காராலும் - பெருவாரி மக்கள் தொகுதியான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழிசெய்த முன்னேற்ற முயற்சிகள் யாவும்,
இன்று ஆங்கில வழிக் கல்வியின் பெயரால் பெரிதும் தடைபட்டு நிற்கும் போக்கை, நாம் மீளவும் ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தாய்மொழியைத் தவிர்த்து விட்டு, அயல்மொழிவாயிலாக முன்னேறியதாக உலகில் எந்த நாடும் இல்லை; அதற்கான வாய்ப்புக் கூறுகளும் இல்லை. தாய்மொழிவழிக் கல்வி ஒன்றினால்தான் அனைவருக்குமான
கல்வியும், சமன்மைக்கான உரிமைகளையும் பெறமுடியும்.
உலகமொழிகளுக்கெல்லாம் தாயாகவும், வேராகவும் நின்றுவிளங்கும் தமிழ்மொழியையும், உலகின் தலைசிறந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் நம் தமிழினம், பல நூற்றாண்டு காலம் நோயுற்று இருந்து
வருகின்ற நிலைமாறவும் - தலைநிமிர்ந்து முன்னேற்றப்பாதை நோக்கி நடையிடவும் வேண்டுமெனில் - இனிமேலும் காலத்தாழ்த்தம் இல்லாமல் தாய்மொழிக்கல்வியை விரைந்து நடைமுறைப்படுத்துவதே நம்மின்
உடனடிக் கடமையாகும்.