Monday, December 10, 2007

உலகத் தமிழர்களுக்கு வணக்கம் !

எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் !
வரலாற்றுப் படியும், அகழ் ஆய்வுகளின்படியும், இலக்கியம் மற்றும் மொழியியல் ஆய்வுகளின்படியும் தமிழினம் காலத்தாலும் கலை, பண்பாடு, நாகரிகம் இவற்றின் வளர்ச்சியினாலும் முந்தி இருப்பதை நாம் அறிந்து கொண்ட நிலையில், இன்றைக்கு சொந்த நாட்டிலே அடிமைகளாக, ஏதிலிகளாக இருந்து வருவது கொடுமையிலும் கொடுமையான இழிவாகும். உலகளவில், அறிவு செழிப்புற்ற இக் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்ற
சூழலிலும்கூட - நம்மை நாமே உயர்த்திககொள்ளமுடியாதவர்களாக இருப்பதும், விழிப்புணர்ச்சியற்றவர்களாக இருப்பதும் மிகவும் அவலத்திற்குரியதாகும். இந் நிலைகளை மாற்றுவதற்கு நாம் நிறைய போராட வேண்டியுள்ளது. இதுவே என் சிந்தனைச் செலவின் தொடக்கக் கோடாகும். நன்றி!